Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Thursday, December 2, 2010


எங்கே போகிறோம் நாம்

– நன்றி தமிழருவி மணியன் மற்றும் ஜூனியர் விகடன்



அரிச்சந்திரன் விஸ்வாமித்திரனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியில்… தன்னுடைய அரசைத் துறந்தான்; காசி நகர் அடைந்து மனைவியையும், மகனையும் வேதியன் ஒருவனிடம் விலைக்கு விற்றான். தன்னை ஒரு புலையனிடம் ஒப்புக்கொடுத்து, அவனிடம் அடிமை ஊழியம் ஆற்றினான். உயிரைக் கொடுத்தாவது, வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதே தன்னுடைய சுதர்மம் என்று அவன் உறுதிகொண்டிருந்ததாக… அரிச்சந்திர புராணம் உரைக் கிறது. கைகேயிக்குத் தந்த வாக்கைக் காப்பதற்கு தசரதன் தன் உயிரையே தாரை வார்த்தான் என்கிறது ராமாயண இதிகாசம். ஆனால், நம் அரசியல்வாதிகள் வகுத்துக் கொண்ட வாழ்நெறியே வேறல்லவா! அவர்களுக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளில், வாக்குறுதியை நினைத்துப் பார்க்க நேரம் எங்கே இருக்கிறது?


துரோணரும், துருபதனும் ஒரே குருகுலத்தில் ஒன்றாக வித்தை பயின்றபோது, இருவருக்கும் இடையில் நெருங்கிய நட்பு மலர்ந்தது. நட்பின் நெகிழ்ச்சியில் ஒருநாள், ‘நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் என் அரசில் பாதியை உனக்குப் பகிர்ந்தளிப்பேன்!’ என்று துரோணரிடம் வாக்களித்தான் துருபதன். காலம் அதன் கதியில் ஓடியது. துருபதன் பாஞ்சாலத்தின் அரசனாகப் பதவியேற்றான். துரோணரோ, தன் பிள்ளை அசுவத்தாமனுக்குப் பால் வாங்கவும் வழியின்றி வறுமையில் வாடினார். பழைய நட்பின் பாசத்தில் அவர் பாஞ்சாலம் சென்று துருபதனிடம் உதவி கேட்டார். ‘அரசனாகிய என்னை நீ எப்படி நண்பனாக நினைக்கலாம்? எந்த நட்பும் எல்லாக் காலமும் நீடிப்பதில்லை. கோழையோடு வீரனும், ஏழையோடு அரசனும் எப்படி நட்புக் கொள்ள முடியும்? என்றோ நான் அளித்த வாக்குறுதியை அன்றே மறக்காமல், இன்று வந்து என்முன் நிற்கும் உன்னைப் போன்ற முட்டாளை எங்கும் பார்க்க முடியாது!’ என்று பழித்து அவமானப்படுத்தினான் துருபதன். ஆட்சி நாற்காலியில் அமர்ந்ததும், அளித்த வாக்குறுதியை மறப்பது மகாபாரதக் காலம் தொட்டு இன்றுவரை தொடர்கிறது.


நாடு விடுதலை அடைந்ததும் பாலாறும் தேனாறும் தானாகப் பாய்ந்தோடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வாக்குறுதி வழங்கினர். சுதந்திரம் வந்து சேர்ந்து 62 ஆண்டுகள் ஆனபின்பும், ஏழைகள் இருக்கும் இடத்தில் பாலாறும் பாயவில்லை; தேனாறும் தென்படவில்லை. பள்ளம் தேடியே தண்ணீர் பாயும். ஆனால், நம் ஆட்சியாளர்களால் பயன் பெற்றவர்கள் மேட்டுக்குடி வர்க்கமே தவிர, பள்ளத்தில் இருக்கும் பாமர ஏழைகள் அன்று. இந்தியாவில் 600 கட்சிகளுக்கு மேல் இருக்கின்றன. நான்கு மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், தேசியக் கட்சிகள் என்ற தகுதியைப் பெறுகின்றன. தேர்தல் கமிஷனால் 9 கட்சிகள் தேசியக் கட்சிகளாகவும், 38 கட்சிகள் மாநிலக் கட்சிகளாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் வழங்கிய வாக்குறுதிகளை எந்த வாக்காளரும் நினைவில் நிறுத்துவதில்லை. இதற்கு முக்கியக் காரணம், தேர்தல் அறிக்கைகளும் தேர்தல் நேரத்து வாக்குறுதிகளும் வெறும் சடங்குகளாகி விட்டதுதான்.


‘காங்கிரஸ் 1952 முதல் 2009 வரை ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் எத்தனை வாக்குறுதிகள் வழங்கியது… அவற்றுள் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன?’ என்று எந்த காங்கிரஸ் தலைவராவது சொல்லக் கூடுமா? தன்னுடைய தகர்ந்து போன அதிகாரக் கூட்டமைப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இந்திரா காந்தி 1971-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ‘வறுமையே வெளியேறு’ என்று போர்ப்பரணி பாடினார். இரண்டு தட்டுத் தட்டினால் இடம் பெயர்வதற்கு வறுமையென்ன எருமையா? இந்தியாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற நேரு 17 ஆண்டுகளும், அவருடைய மகள் இந்திராகாந்தி 16 ஆண்டுகளும், இந்திராவின் மகன் ராஜீவ் 5 ஆண்டுகளும், சோனியாவின் வழிகாட்டுதலில் மன்மோகன் சிங் 5 ஆண்டுகளும் நாட்டின் உயர் பதவியில் அமர்ந்து ஆட்சி நடத்தினர். சோனியாவின் கண்ணசைவுக்கேற்ப காரியமாற்றும் பிரதமராக மன்மோகன் சிங் இன்றும் தொடர்கிறார். ஒரு குடும்பத்தின் ஆளுகையில் பாரததேசம் 43 ஆண்டுகளுக்கு மேல் ஆட்பட்டுக் கிடந்து என்ன பயன்? வறுமை முற்றாக வெளியேறியதா? இன்றும் எண்பது கோடி மக்களின் ஒருநாள் வருமானம் இருபது ரூபாய்க்கும் குறைவு என்றுதானே சென்குப்தா குழுவின் அறிக்கை அதிர்ச்சித் தகவல் தந்திருக்கிறது. அப்படியானால்… உலக மயமாக்கலும், தாராள மயமாக்கலும், தனியார் மயமாக்கலும் கொண்டு வந்த புதிய பொருளாதாரம் யாருக்குப் பயன் தருகிறது? சிதம்பரம் போன்றவர்கள் நிதியமைச்சர்களாக இருந் ததில் ஆதாயம் அடைந் தவர்கள் அம்பானிகளா? கூவம் நாற்றத்தில் குடிசைக்குள் வாழும் ஏழைக் குப்பன்களா?


தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் வெறும் தேர்தல் கட்சி களாகத் தேய்ந்து போன பின்பு… வழங்கிய வாக்குறுதிகளுக்குப் பஞ்சமே இல்லை! நிறைவேற்றவே முடியாத வாக்குறுதியைத் தந்து வாக்காளர்களை ஏமாற்றிய முதல் அரசியல் குற்றவாளி அறிஞர் அண்ணா. 1967-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம்!’ என்று வாக்குறுதி வழங்கி அனைவரையும் வியப்பிலாழ்த்தினார் அண்ணா. ‘தவறினால் முச்சந்தியில் நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்!’ என்று ஆணித்தரமாக அவர் பேசிய பேச்சு, ஏதுமறியாப் பாமரர்களை ஏமாற்றியது. கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத அந்த வாக்குறுதி, மாலை நேரத்து மேடைப் பேச்சில் வந்து விழுந்தது. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டுக் காயக்கட்டுகளுடன் தோற்றம் தந்த எம்.ஜி.ஆர். சுவரொட்டியும், மாணவர்கள் 1965-ல் நடத்திய மொழிப் போராட்டமும், அண்ணாவின் மூன்றுபடி அரிசி வாக்குறுதியும்தான் தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்தின. அண்ணா சொன்னபடி ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி போட முடியவில்லை. ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். ‘ஆளுக்கு ஐந்து ஏக்கர் நிலம், இரண்டு காளை மாடுகள் இலவசமாகத் தரப்படும்’ என்று வசனம் பேசியதையே வாக்குறுதியாக நம்பி, அவரை முதல்வராக்கிய ‘அறிவாளிகள்’ நாம். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்டவர்கள், தமிழுக்கு மத்திய அரசு செம்மொழித் தகுதியைத் தந்து விட்டதையே ‘மாநில சுயாட்சி’ பெற்றவர்கள் போல் பெருமை பொங்கப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு திராவிடக் கட்சிகளும் தேர்தல் உற்சவத்தின்போது வழங்கும் வாக்குறுதிகள் மக்கள் நலனைப் பெருக்குவதற்காக அன்று. ஜெயலலிதா ஆட்சி நாற்காலியில் அமர்ந்து விடக் கூடாது என்பதற்காக கலைஞரும், முதல்வர் பதவியிலிருந்து கலைஞரை இறக்கியாக வேண்டும் என்ற தவிப்பில் ஜெயலலிதாவும் போட்டி போட்டு வாக்குறுதிகளை வழங்குகின்றனர். இந்த வாக்குறுதிப் போட்டியில் அரசின் நிதிநிலை குறித்த அக்கறை இருவருக்குமே இல்லை.


திருச்செந்தூரிலும், வந்தவாசியிலும் இடைத் தேர்தல் வந்தது. தி.மு.கழகம் திருச்செந்தூரில் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அழகிரி அறிவித்தார். அவர் எந்த இலக்கை நிர்ணயித்தாலும், அதை எளிதாக அடையும் வழி முறையை அவர் அறிவார். மகா பாரதத்தில் சகுனி சொன்னபடி சூதாட்டக் காய்கள் விழுவதைப் போன்று தேர்தல் களத்தில் அழகிரி அறிவித்தபடி வாக்குகள் வந்து விழும். ‘அழகிரி காய்ச்சலில் மூளை குழம்பிய முன்னாள்’ தமிழக நிதியமைச்சர் பொன்னையன் திருச்செந்தூர் சென்று, ‘அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு பவுன் தங்கம் ஐயாயிரம் ரூபாய்க்குத் தரப்படும்’ என்று திருவாய் மலர்ந்தார். தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு தமிழக அரசிடம் இல்லை என்பதையும், சர்வதேசப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளே தங்கத்தின் அன்றாட விலையைத் தீர்மானிக்கின்றன என்பதையும் நிதியமைச்சராக இருந்தவர் அறியாதவரா? மனச்சான்றை மறந்து மக்களை ஏமாற்றும் மலிவான வாக்குறுதிகளை வழங்கும் அரசியல்வாதிகளை இனியும் நாம் நம்பி ஏமாறப் போகிறோமா?


கலைஞர் 2006- சட்டமன்றத் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறை வேற்றிவிட்டார் என்று புகழாரம்சூட்டப் படுகிறது. வாக்குறுதி வழங்கியபடி நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் உரிய வேகத்துடன் செயற் படுத்தப்படவில்லை என்ற விமர்சனம் இன்னொரு பக்கம் எழுப்பப்படுகிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஏழைகளுக்கான காப்பீட்டுத் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சி, நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு அரசு தரிசு நிலம் வழங்கும் திட்டம் என்று பல நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களிடம் பரவலாக வரவேற்பைப் பெற்றிருப்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், ஏழ்மையை முற்றாக அகற்றும் பொருளாதாரத் திட்டங்கள் ஒன்று கூட இந்த அரசிடம் இல்லை என்பதும் புறக்கணிக்க முடியாத உண்மை. பழுதாகிவிட்ட பகுதியில் பராமரிப்புப் பணியைச் செய்யாமல், பளபளப்புப் படுதா விரித்து மறைப்பதில் கலைஞரின் கைவண்ணம் ஈடிணையற்றது.


முறைகேடுகள் நடக்காத தேர்தலை இனி நாம் காணக்கூடும் என்ற நம்பிக்கை கால நடையில் பொய்த்து விட்டது. பணபலம், அடியாள் பலம், அதிகார பலம் ஆகிய மூன்றும்தான் தேர்தல் வெற்றியைத் தேடித் தரும் என்றால், உண்மையான ஜனநாயகம் எப்படி உயிர் வாழும்? நியாயமான தேர்தல் நடக்கவில்லை என்று கலைஞர் அரசைக் குறை கூறும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னை மாநகராட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்படும் பீகார் அரசியலைப் பின்பற்றியது குறித்து வாய் திறப்பாரா? அமைச்சர்கள் அனைவரும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளை முற்றுகையிடும் போக்கை ஜெயலலிதாதான் முதலில் கும்மிடிப்பூண்டியிலும், காஞ்சிபுரத்திலும் அறிமுகப்படுத்தினார். தவறான அரசியலில் ஜெயலலிதா முதுகலைப் பட்டம் பெற்றவர் என்றால், கலைஞரும், அவருடைய சகாக்களும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பதுதானே பொய்மைக் கலப்பற்ற மெய்? கள்ளவாக்குப் போடுவதை ஒரு கலையாகவே கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லவா கழகக் கண்மணிகள்!


திருமங்கலம் பாணிதான் இனி எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுமெனில், நேர்மையும், உண்மையும் சார்ந்த சமூகப் பொறுப்பு உணர்வு மிக்க சாதாரண மனிதர்கள் தேர்தலில் எப்படி நிற்க முடியும்? அழகிரி உருவாக்கிய ‘திருமங்கலம் தேர்தல் முறை’ 1957-ல் காங்கிரஸ் அரசால் பின்பற்றப்பட்டிருந்தால்… அண்ணாவும், கலைஞரும், அன்பழகனும், நாவலரும் சட்டமன்றத்துக்குள்ளேயே நுழைந்திருக்க முடியாதே! அன்றைய தி.மு.க-வின் தலைவர்கள் அனைவரும் ஏழையும் பாழையுமாக இருந்த சாமானியர்கள்தானே! ’1957 தேர்தலில் தி.மு.கழகம் ஈடுபடும்போது, அதற்கிருந்த வசதிகள் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. பணம்… அது பற்றி வாழ்க்கையிலேயே கவலைப்படாத தி.மு.கழகத் தோழர்கள் தேர்தலிலும் கவலைப்படவே இல்லை… ‘எதிர்த்துப் போட்டியிடுபவர்களின் பணபலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பணியாற்றுங்கள். வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்களை விற்றேனும் அவசியமான செலவுகளைச் சரிக்கட்டித் தேர்தல் பணியாற்றுங்கள்’ என்பது அறிஞர் அண்ணா இட்ட கட்டளை. வாழ்க்கைப் பிரச்னைக்கே பணத்துக்காகத் திணறிக் கொண்டிருந்த கழகத் தோழர்கள், தேர்தல் பணிக்காகப் பணத்துக்கு அலைந்ததை என்னால் மறக்க முடியாது’ (கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ முதல் தொகுதி) என்று எழுதியிருக்கும் கலைஞரின் கழகம்தான் ‘திருமங்கலத் தேர்தல் திருவிழா’ நடத்தியது என்பது நம்மை அதிர வைக்கும் உண்மை அல்லவா! அண்ணா அன்று கழகத்தவரை ‘சாலையோரத்துச் சாமானியர்கள்’ என்று வருணித்தார். அந்த சாலையோரத்துச் சாமானியர்களில் பலர் இன்று அம்பானிக்கும், பிர்லாவுக்கும் போட்டியாளர்களாக வளர்ந்தது எப்படி?

‘என்னிடமிருந்த 1335 எண்ணுள்ள ஃபியட் கார், முரசொலி அலுவலகத்திலிருந்து ஒரு பழைய வேன், அச்சடிக்கப்பட்ட என்னுடைய வேண்டுகோள் அடங்கிய துண்டுத்தாள், ஒரு டேப்ரிக்கார்டர். இவைதான் சாதனங்கள்’ என்கிறார் ‘நெஞ்சுக்கு நீதி’யில் கலைஞர். இந்த சாதனங்களுடன் சென்று குளித்தலையில் 1957-ல் வெற்றிபெற்ற கலைஞர், இதே சாதனங்களுடன் ஒருவர் களத்தில் நின்று சட்டமன்றம் செல்லும் சூழலை இன்றில்லாமல் செய்து விட்டாரே! இந்தியாவிலேயே ஆந்திரம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களில்தான் ஒவ்வொரு தொகுதிக்கும் கோடிக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது. இன்றுள்ள நிலையில் காமராஜரும், கக்கனும் வெற்றி பெறக்கூடுமா?


‘ஜனநாயகம் பிரபுக்கள் ஆட்சியை விடவும் கீழானது. ஏனெனில், சமத்துவம் என்ற பொய்யான யூகத்தை அது அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, திறமை எண்ணிக்கைக்கு பலியாகிறது. தந்திரங்களால்தான் எண்ணிக்கை இயக்கப்படுகின்றன. மக்கள் மிக எளிதில் திசை திரும்பக் கூடியவர்கள். கருத்தளவில் அவர்கள் திடபுத்தி இல்லாதவர்கள்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே அரிஸ்டாடில் எழுதி வைத்ததற்கு இலக்கணமாக இந்திய ஜனநாயகம் இருக்கிறது. ‘ஒரேயரு அயோக்கியனை மக்கள் சமாளிப்பதற்குப் பெயர் சர்வாதிகாரம். ஒவ்வொரு அயோக்கியனையும் சமாளிப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்’ என்பது கண்ணதாசனின் கண்டுபிடிப்பு

Wednesday, May 20, 2009

Lies, deceptions, hallmark of Sri Lanka war- Telegraph

[TamilNet, Monday, 18 May 2009, 11:14 GMT]
"Chinese weapons, Indian intelligence, Sinhala Armed personals and racist Sri Lankan leaders came together to perform one of the most cruel war that has cost the lives of many thousands innocents," says Richard Dixon, a columnist in London's Telegraph. While "Tamils all over the world are mourning the death of their loved ones back home," and "[b]irds have now stopped singing in a land called Vanni," Dixon writes, "[l]eaders of Sri Lanka and some responsible officers in the UN, should be questioned in international courts in order to find out if they were responsible for the deaths of innocent Tamils."

The Real Culprits behind Sri Lankan War

Birds have now stopped singing in a land called Vanni. Sun, moon and the stars in the sky have hidden their faces. Angel of death flew over the skies of Vanni and took the lives of more than twenty five thousand innocent Tamil men, women and children in a single day.

Thousands of wounded are still crying out for help. They are bleeding to death on the streets. They have touched neither water nor food for days. Nobody has come to rescue them. Those who fight for the rights of the animals and those who preach about Buddha and Mahatma have no compassion for the dying Tamils.

Chinese weapons, Indian intelligence, Sinhala Armed personals and racist Sri Lankan leaders came together to perform one of the most cruel war that has cost the lives of many thousands innocents.

While thousands of innocent children and women are facing painful and slow death, Sinhala Buddhist extremists are celebrating victory with flags and fire crackers in the south of the country.

War that was started with hidden agendas of local and international forces, went on for months not just with the strength of the weapons but with well organised false propaganda done by the Sri Lankan officials.

This war was orchestrated and staged with lies and deceptions from the beginning till the end.

Sri Lankan leaders are still vomiting out worms of lies

Rulers of Sri Lanka are continuing to vomit out worms of lies to justify their atrocities against innocent lives. They started with “War on Terror” but changed the buzz word to “Humanitarian Operation” in order to deceive the international community. “War on Terror” was an accepted norm during the Bush era but lost it's validity now. Therefore they had changed the name of the game to “Humanitarian operation”

Why do they lie?

Because they have many hidden agendas behind this dirty war. They want to hide the atrocities that are being committed against innocent civilians. They themselves know, what they are doing is wrong and not acceptable in a civilised world.

Above everything they want to protect India who are orchestrating the war in Sri Lanka. Indian intelligent agents and military experts are working closely with the Sri Lankan forces in the war zone.

How do they manage to lie?
They simply hide the truth. When the truth is hidden what comes out is lie.

Foreign journalists and aid workers are barred from the war zone and IDP camps. Those who try to enter and report about the war, are kicked out of the country if they are critical of the government.

Local journalists are intimidated, tortured and sometime killed. Telling the truth is considered a crime in Sri Lanka.

Phone lines are tapped. Web sites are blocked. Anybody who talk against the government is considered as Terrorist or Terrorist supporter.

In the war front, dead bodies of the civilians are burned to ashes using powerful chemicals. This is to hide the number of innocent civilians that have perished in the war.

Sri Lankan government officials very often organise staged visits to the IDP camps and force the refugees to lie to the foreign diplomats.

What did they lie about?

They lied about the objective of the war, weapons used, number of civilian causalities and military operations.

Although they initially claimed that the objective of the war was to defeat the LTTE, they have in fact killed and wounded several thousands of innocent Tamil civilians with heavy weapons. They used chemical weapons and cluster bombs on innocents, but they continue to deny the usage of such weapons.

Sri Lankan forces have destroyed Schools, hospitals and farm lands and made the whole place into a graveyard for the Tamils. This is also regularly denied by the Sri Lankan authorities.

This war has claimed more than fifty thousands lives just within the last few months but the Sri Lankan government is not going to open their mouth and tell this truth to the world.

Why didn't the UN intervene?
United Nations, who is supposed to be a guardian for the oppressed people in the world turned out to be a silent spectator of a man made disaster that has taken the lives of many thousands.

There is a conspiracy behind this whole war game. China was initially blocking every attempt that was made by UK and France to discuss the Sri Lankan issue in the Security Council.

Ban Ki-moon's chief of staff Vijay Nambiar was sent to Sri Lanka to organise a cease fire. He failed to secure a ceasefire and returned back after meeting the Sri Lankan and Indian officials.

Interestingly Vijay Nambiar couldn't achieve anything constructive in his visit and he had also refused to meet the reporters.

This `unbiased` negotiator, who appears to actually be on the payroll of the Sri Lankan government, though indirectly, something that is obviously known to the United Nations. Vijay Nambiar`s brother (Satish Nambiar) is a paid consultant for the Sri Lankan army, and has been since 2002. Is there any link between the UN and the Sri Lankan army`s paid consultant?

UN has once again proved to the world that it is no longer a trust worthy international body that can protect the vulnerable.

They have all achieved what they wanted

What we are witnessing in Sri Lanka is neither “war on terror” nor a Humanitarian operation. This is simply a racist war against the Tamils conducted with the help of India and China. You wouldn't shoot at the passengers and bomb the whole bus, if you had to rescue the hostages.

Sinhala extremists are already celebrating and they have also started to intimidate Tamils in the South of the country.

India and China have started to work on their hidden agendas in Sri Lanka.

Tamils all over the world are mourning the death of their loved ones back home.

What Next?

When the rocket scientists designed highly complex derivatives and greedy traders traded these new emperors cloths, many investment banks collapsed. Pension funds lost money. Bankers committed suicide.

The whole financial disaster was caused by greedy and selfish individuals who had short term hidden agendas.

We took action. Greedy bankers and traders were taken to courts. New rules and regulations are now in place to prevent this happening again.In the same way, the masters of this war in Sri Lanka should be brought to justice.

Sinhala government with racist agendas , China and India with their strategic interests and UN with corrupt officers are the evil ingredients of this dirty war that has cost the lives of many thousands innocent Tamils.

Leaders of Sri Lanka and some responsible officers in the UN, should be questioned in international courts in order to find out if they were responsible for the deaths of innocent Tamils.

If we didn't, we would end up seeing more of such evil games repeated over and over again.

Richard Dixon
RichardDixons@googlemail.com

Thursday, April 9, 2009

Secret wealth abroad


Secret wealth abroad

--S. Gurumurthy*


Switzerland has been accused of giving shelter to black money and there has been a lot of inflow of such wealth from India and other countries of the world.” This is not L K Advani, on election mode, speaking last Sunday, but the Swiss ambassador to India briefing the media in Delhi last year.

The occasion was the 60th anniversary of Indo-Swiss Friendship Treaty. Admitting that Indian black money gets hoarded in his country, he added that the new law in Switzerland would, not stop it, but control it “up to a certain limit”.

The Swiss diplomat authentically answers the first of the FAQs, that is, whether a lot of Indian money is really stashed away in Swiss banks. Swiss banks are not the only secret destination. There are 37 such shelters in the world, says US Inland Revenue. The secret owners of the secreted monies operate in secrecy — venal businessmen, corrupt politicians, public servants, drug lords, and criminal gangs like the D-company. The slush monies are the financial RDX for terror, besides weapons of mass destruction of national and global finance. That there is secret money is no more a secret. Only the amounts and persons are secret. But how much of India’s stolen wealth could be stashed in Switzerland? Specific estimates of this later. Before that, here is a sideshow, but a relevant one.

In the late 1980s, at the behest of The Indian Express, while investigating the Reliance scam, I had attempted to trail the Indian monies secreted abroad. In the course of the probe, I had contacted Fairfax, a US investigative firm, to uncover the Indian wealth stashed abroad. Impressed by their skills, I persuaded the Government of India to engage the firm for the task. Fairfax agreed to work for a slice of the black wealth uncovered by them as fee.

According to Swiss sources then, the Indian money secreted in Swiss banks was some $300 billion. That was enough to excite Fairfax to go for the kill. But, soon my efforts landed me in jail on March 13, 1987, when the CBI arrested me on charges that later turned out to be bogus, but were enough to stop the probe. The whole nation knew then that the real reason why rulers struck was their fear that the probe had targeted the Bofors payoff and secret money of the ruling family abroad. Rajiv Gandhi, who was the prime minister then, moved honest and bold civil servants like Vinod Pandey and Bhure Lal out of the probe and eventually sacked V P Singh who, as finance minister then, had authorised the efforts.

The chain of events that followed led to corruption emerging as the major issue in the 1989 polls in which Rajiv Gandhi, who had wiped out the opposition in 1984 elections, was defeated, and V P Singh became the prime minister. But there is a great lesson in these developments that often goes unnoticed. And that is, the way the bold national interest initiative to unearth the Indian black wealth abroad was aborted clearly confirmed that the ruling family was mortally afraid of any probe into secret money abroad. This fear haunts the family-led Congress party even today. That is why the 1987 episode is relevant now.

Now back to the main story.

Illicit money is the dirty outcome of modern capitalism. But, after 9/11, the US realised that not just the buccaneers in business, but Osama bin Laden could also hide his funds in secret havens and use them to bomb the world. Campaigns against dirty money as high security risk commenced with the path-breaking research done by Raymond W Baker, a Harvard MBA and a Brookings scholar. He published his research as a book Capitalism’s Achilles Heel: Dirty Money and How to Renew the Free- Market System. The book was published in 2005. This set off intense debate in the US as the exposure linked dirty business and dirty money with terror and national security.

Raymond Baker had estimated, using authentic data, tools and reasons, the dirty wealth secreted in banks at $11.5 trillion to which, he found, one more trillion was being added annually. He added that in the process the West was getting an annual bounty of $500 billion from the developing countries, India included.

Global Financial Integrity (GFI), a global watchdog headed by Baker to curtail illicit money flows, has recently brought out detailed estimates of the black wealth hoarded in secret havens from different countries. GFI research shows that during the period 2002 to 2006, annually $27.3 billion was stashed away from India, making a total of $137.5 billion for the five-year period. That is, in just five years, Indian wealth amounting to Rs 6.88 lakh crore has been smuggled out of India. This gives a clue as to how much Indian money would have slipped out of India in the last 62 years, particularly during the Nehruvian socialist regime when the income tax (97.5 per cent) and wealth tax (almost equal to the income earned on investments) together constituted double the income earned.

It is undisputed that the Nehruvian socialist model forced huge sums out of India. So the amount of Indian black wealth secreted away in the last 60 years — estimated at from $500 billion (Rs 25 lakh crore) to $1400 billion (Rs 70 lakh crore) — does not seem to be wide off the mark. Economists call it flight of capital. This is the people’s money stolen from them.

See the consequence even if part of it is brought back. A portion of it would make India free from all external debts which is now over $220 billion; India will transform into an economic superpower; some 10 or 15 Indian rupees could buy a US dollar which today 50 Indian rupees cannot; a litre of petrol on our roadside would cost Rs 15 or even less, against today’s 50 plus; the cost of imports in rupee terms would be down to a third or half; India’s entire infrastructure needs can be funded; India will become so energy efficient and costcompetitive that exporters may need no sops at all; India will lend to — not, as it does now, borrow from — the world; Indian housing can be funded at affordable cost; rural poverty can be wiped out... The list is endless. But, then, is it possible to bring back the secreted monies? What are the roadblocks to such efforts?


A deafening silence on funny money


It was unthinkable six months ago. Switzerland, once a pet of Western capitalism, is now its hate object. During World War II, the tiny nation was the common love of both the Allied and Axis powers, at war with each other. But neutral Switzerland, a friend of all since Napoleonic days, is friendless today. Its prime attraction, financial secrecy secured by law, has become its nemesis.

Germany first, France next, the US later, with the UK joining last, have, individually and together, declared a war against secret banking and tax havens like Switzerland.

It is a crusade by the West against the Swiss, says the media. Tax havens ask for no income tax from non-citizens and their banks ask no questions about their money. Modern capitalism had all along winked at secret banks

and tax shelters; even nicknamed secret money ‘funny money’. But now the West chases secret money like it targets al-Qaeda.

Why this miraculous shift? The short answer: ‘financial crisis’. The Guardian of UK wrote (March 4), “European leaders grew increasingly agitated at how tax havens have fostered secrecy that has contributed to the collapse of banks the world over”. The newspaper’s Tax Gap Series estimated the unaccounted global wealth held in secret havens, including Switzerland, at $13 trillion. The annual tax evasion on the dirty fund, estimated at $255 billion was, the newspaper said, twice the global budget for poor nations. Der Spiegel, a German magazine, reported (March 3) that “Cash strapped governments around the world see the opportunity to finally put an end to bank secrecy” to access the money concealed by their nationals. It added “British Prime Minister Gordon Brown, French President Nicholas Sarkozy and German Chancellor Angela Merkel are now joining forces” and “they have set their sights on Switzerland”.

The crusade against Swiss banks was started by Germany in early 2008 when its intelligence bribed — bribed? Yes — an informant in LGT Bank in Liechtenstein and got a CD containing the names of some 1,500 tax dodgers, and raided half of them, who were its citizens. It also offered, free of cost, the names of citizens of other countries. Many accepted the offer gratefully.

Thereafter, in the third quarter of 2008, Germany pressed the Organisation of Economic Co-operation and Development (OECD) to blacklist Switzerland for protecting tax dodgers.

Switzerland is an OECD member and twothirds of the Swiss speak German. Yet Germany couldn’t care less. Soon, France joined Germany.

“We want to put a stop to tax havens”, thundered Sarkozy.

At the preparatory G20 summit in Berlin early February, European leaders vowed to launch a global crusade against tax havens at the G20 meet in London, said the Irish Financial News. Europe’s anger was explicit in its refusal to allow the Swiss plea to be presented before the G20 in London.

The US moved even more menacingly. On February 18, the US Inland Revenue threatened the largest Swiss bank, UBS, with a lawsuit — that would have bankrupted it — unless the bank disclosed the names and accounts of some 300 American tax dodgers. A frightened UBS forthwith surrendered the secret data to the US before the account holders could stall it by a Swiss court order. Later, the Obama administration told the US Senate that it would bring laws to prise open the world’s most secretive tax havens.

At this point the UK joined the crusade.

Switzerland wilted under the pressure. Spiegel wrote that, for generations, the Swiss had held bank secrecy as “not negotiable”, and added that it was “no longer” so. The magazine quoted Swiss finance minister Merz as saying that they would have “to compromise”. The Swiss justice and foreign ministers, the magazine reported, had hinted that the country might have to stop protecting tax dodgers. Subsequently, a nervous Merz met Gordon Brown on March 14 with a deal to prevent any move in G20 to blacklist his country. The deal was that Swiss banks would adopt the bank transparency rules of OECD countries. Brown claimed that it was “the beginning of the end of banking secrecy”. Yet, the US is pressing ahead with a law to punish banking secrecy.

When the crusade of the West against Swiss banks is succeeding, here Dr Manmohan Singh and his government, instead of celebrating, seem to be worried at their success. Three bits of evidence expose the Congress-led government’s not-so-well-hidden worry. First, when Germany’s finance ministry offered the LTG bank secret data to any country that needed it, the government would not ask for it despite reports that it contained some 100 Indian names. When in April last year, L K Advani wrote to Manmohan, requesting to him to ask Germany for the data, the then finance minister responded evasively. Transparency International noted India’s “stoic silence over the issue” and that it “has not approached the German government for the data’’ (Economic Times, May 25 2008]. More, the revenue secretary in Delhi has reportedly advised the Indian ambassador in Berlin not to push Germany for the details as Germany might not like it – clear proof that the government is scuttling, not getting, the details.

Second, when, in the G20 preparatory meeting at Berlin, Germany and France were threatening to blacklist Swiss and other secret tax shelters, India’s silence at Berlin was deafening.

Montek Singh Ahluwalia, the PM’s righthand who, along with Dr Rakesh Mohan, represented India at Berlin, did not utter a word in support of Germany and France. India, a principal victim of banking secrecy, should have been leading the war cry against it. But it did not even morally support those waging the war.

Third, when on Sunday last L K Advani told Manmohan Singh that India should join in the G20 effort to break banking secrecy, the PM did not respond. The spokesperson of the Congress Abhishek Singhvi responded that G20 was not the forum for that, being blissfully ignorant of the fact that it was a main agenda of G20 meet.

In fact just ahead of the meeting, Sarkozy had threatened to walk out unless the G20 decisively acted against secret banks and tax havens.

No need to strain further to understand Manmohan’s compulsions. The fear that drove the ruling family to abort the 1987 probe into Indian monies secreted abroad is still evident. But Advani’s threat to turn the recovery of Indian wealth secreted abroad an election issue has got the PM and his party off guard. The party has blundered, saying G20 is not the forum, when it is precisely that. Now the prime minister cannot remain silent. He has to do something. At least make a show of doing. But can he? QED: Dr Manmohan Singh stands between the devil and the deep sea — between his party and L K Advani.


*Swaminathan Gurumurthy(Tamil: ஸ்வாமிநாதன் குருமூர்த்தி;Hindi: स्वामिनाथन गुरुमूर्ती) is the convenor of the Swadeshi Jagaran Manch and a well-known Chartered Accountant.
Gurumurthy is an acclaimed writer whose columns have found place on several dailies and periodicals. He is known for his radical views and opinions while his intense combination of words and moods are a testimony of his passion towards raging issues.
He is a nationalist to the core and is a strong proponent of the traditional Indian economic wisdom that was a part of every home and village model but has been slowly and stealthly been discarded by British Rule and subsequently by the disastrous and short-sighted Nehruvian economic policies post Independence.