Showing posts with label Comedy. Show all posts
Showing posts with label Comedy. Show all posts

Sunday, January 23, 2011

One, Two, Three (1961)



Director: Billy Wilder
Genre: Comedy
Movie Type: Farce, Political Satire
Main Cast: James Cagney, Horst Buchholz, Pamela Tiffin, Arlene Francis, Liselotte Pulver
Release Year: 1961
Country: US

A Coca-Cola executive in West Berlin tries to keep the boss's daughter from marrying a Communist.

C. R. MacNamara(James Cagney), a fast-talking Coca-Cola sales representative in West Berlin, is attempting to introduce the beverage behind the Iron Curtain, hopeful that such a coup will result in his promotion to head of European operations. His hopes are dashed, however, when he learns that his company is not interested in dealing with the Russians; instead, he is ordered to chaperone his boss's daughter, 17-year-old Scarlett Hazeltine, during her 2-week stay in Berlin. The girl's visit lasts 2 months, in which time she secretly marries Otto Ludwig Piffl, a beatnik Communist from East Berlin. MacNamara learns the horrifying news at the same time he receives word that Hazeltine is arriving in West Berlin the next day. Frantic, MacNamara plants on Otto a copy of the Wall Street Journal , which gets him arrested by the East German police. After arranging to have the marriage certificate removed from official files, MacNamara learns that Scarlett is pregnant; aware that he must present Hazeltine with an ideal son-in-law, MacNamara gets Otto out of the East Berlin jail, buys him a royal title, and converts him into a well-groomed capitalist. He is so successful that Hazeltine decides that Otto is the man to head Coca-Cola's European operations; MacNamara must settle for a vice-presidency in the Atlanta office.






Cagney was an extremely versatile performer who was adept in musical and comedic roles as well as drama. In One, Two, Three, he really excels and is able to give full justice to the madcap lunacy found in the screenplay written by Wilder and his frequent collaborator I.A.L. Diamond. It’s difficult to imagine any other actor who could pull off this role half as well as Cagney. On the surface, MacNamara is not a likeable character, but Cagney manages to make him simply gruff and grumpy in a way that the viewer can’t help but like the guy regardless of whether you like what’s he doing, reminiscent of the persona Walter Matthau later would adopt in many films. The rapid-fire delivery Cagney uses to such good effect here is a logical continuation of the style he developed in his gangster roles.


The set piece of the film is an eight-minute stretch where MacNamara does a high-toned makeover on the beatnik Piffle, bringing in a parade of tailors, barbers, haberdashers, etc., and rattling off pages of exacting dialogue with perfect articulation and precision – precisely as Wilder wrote it (it reportedly took many takes and some strained tempers). This dovetails into a mad car chase to the airport and a sharp finish. Audiences laugh – and then quiet themselves to not miss out on the next joke – Wilder’s pace leaves little room for reaction time, just a raised eyebrow or a quick breath.


Adapted by Billy Wilder and I.A.L. Diamond from a Ferenc Molnar play, Wilder's rapid-fire comedy ferociously satirizes the Cold War divide between East and West. Featuring a peerless James Cagney in his last starring role and set in West Berlin, the breathless farce sends up everything from soft-drink capitalism to Communist hypocrisy, Soviet disorganization, male lechery, female giddiness, postwar Germany, and American pop culture. With a relentless stream of one-liners and numerous comic set pieces, such as a prisoner tortured with endless plays of "Itsy-Bitsy Teeny-Weeny Yellow Polka-Dot Bikini" and a mad tabletop striptease that shakes a portrait of Stalin off its perch, Wilder and Cagney never let up the pace for a moment, down to the final Pepsi Cola punch line. Earning critical accolades for its wit and its star, One, Two, Three received one Oscar nomination, for Daniel L. Fapp's crisp widescreen black-and-white photography. (Fapp won the color cinematography Oscar that same year, for West Side Story.) One, Two, Three became a popular hit in Germany after the Berlin Wall came down in 1989.




The non-stop action is brilliantly scored by Andre Previn, who makes great use of Khachaturian's Sabre Dance to accompany the film's multiple manic car rides through Berlin. 


At the time of its release, One, Two, Three did not do well at the box office, including the U.S. and Germany. At least one Berlin newspaper film critic gave it a bad review. However, the film, which went unseen for over 20 years, was received enthusiastically in Germany when it was re-released in 1985. One, Two, Three was given a grand re-premier at a large outdoor showing in Berlin which was broadcast simultaneously over television. The film went on to spend a year in the Berlin theaters as it was rediscovered by West Berlin citizens.


Dialogues


C.R. MacNamara:Ten minutes early! That's a hell of a way to run an airline! Planes are supposed to be late, not early! 


C.R. MacNamara: Of course you were anti-Nazi and you never liked Adolf. 
Schlemmer: Adolf who? 


C.R. MacNamara: Schlemmer you're back in the SS, small salary! 




C.R. MacNamara: Cigarette? Cigar? 
Peripetchikoff: Here, take one of these. 
C.R. Macnamara: Thanks. Hm, 'Made in Havana'. 
Peripetchikoff: We have trade agreement with Cuba. They send us cigars, we send them rockets. 
C.R. Macnamara: Good thinking. 




C.R. MacNamara: You know something? You guys got cheated. This is a pretty crummy cigar. 
Peripetchikoff: Do not worry. We send them pretty crummy rockets. 




Borodenko: When will papers be ready? 
C.R. Macnamara: I'll put my secretary right to work on it. 
Mishkin: Your secretary? She's that blond lady? 
C.R. Macnamara: That's the one. 
Peripetchikoff: [after conferring with the others] You will send papers to East Berlin with blond lady in triplicate. 
C.R. Macnamara: You want the papers in triplicate, or the blond in triplicate? 
Peripetchikoff: See what you can do. 


Otto: I'll pick you up at 6:30 sharp, because the 7:00 train for Moscow leaves promptly at 8:15. 




Scarlet: Do you realize that Otto spelled backwards is Otto? 
Phyllis MacNamara: How about that? 
Scarlet: You'll like him. He looks just like Jack Kennedy, only he's younger and he has more upstairs. 
Phyllis MacNamara: More brains? 
Scarlet: More *hair*. And of course, ideologically, he's much sounder. 
Phyllis MacNamara: Maybe we voted for the wrong man. 
Scarlet: That couldn't happen in Russia. 
Phyllis MacNamara: They don't make mistakes. 
Scarlet: They don't *vote*. 



Wednesday, November 24, 2010

Impersonations by Kevin Spacey


Inside the actors studio with Kevin Spacey 

impersonations, imitation, al pacino, marlon brando, christopher walken, clint eastwood, jack lemmon








Kevin Spacey Impersonates Christopher Walken & Jack Nicholson



Wednesday, October 13, 2010

தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படுகிறது

ஒரு காலத்தில் துக்ளக்கில் டுமீல் செய்திகள் நிறைந்த ஒண்ணரை பக்க நாளேடு என்று போடுவார்கள். எல்லாரையும் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்வார்கள். நானும் ஒரு முயற்சி செய்து பார்க்கிறேனே!--

koottanchoru

தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படுகிறது!

தமிழகம் இரண்டாகப் பிரிகிறது! ஜூவி அதிரடி ரிப்போர்ட்!

அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் பனிப்போரில் கலைஞர் மிகவும் சோர்ந்துவிட்டாராம். தனக்குப் பிறகு தி.மு.க. இருக்குமோ இருக்காதோ என்ற பயம் வந்துவிட்டதாம். அதனால் குடும்பத்தில் எல்லா வாரிசுகளையும் ஒவ்வொருவராக கூப்பிட்டு வைத்துப் பேசினாராம். கடைசியில் குடும்பம், கட்சி எல்லாம் நலமாக இருக்க வேறு வழி இல்லை என்று இந்த முடிவுக்கு வந்திருக்கிறாராம். இதற்கு வழக்கம் போல பேராசிரியரிடம் யாரும் ஆலோசனை கேட்காதபோதும் அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். கலைஞர் சோனியா, மன்மோகன் இருவரிடமும் கெஞ்சி கதறி சம்மதிக்க வைத்துவிட்டாராம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.

கலைஞர் முரசொலியில் இன்று உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம்:

உடன்பிறப்பே,
ஆறரைக் கோடி தமிழர்களுக்கும் ஒரே மாநிலம், ஆறு லட்சம் மிஜோக்களுக்கும் ஒரே மாநிலம் என்பது அநியாயம் இல்லையா! இதைக் கண்டு நீ பொங்கிட மாட்டாயா? நீ வீறு கொண்டெழுந்தால் அதை இந்த நாடு தாங்குமா? இல்லை நானிலம்தான் தாங்குமா? இதை எப்படி சரி செய்வது என்று நாலைந்து மாதமாக தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் அறிவை கூர் தீட்டுவதற்காக தேசத் தந்தை காந்தியார் போல உண்ணாவிரதமும் கொள்ள உறுதி பூண்டேன். உற்றார் உறவினர் அரற்றினர்; இந்த வயதில் நீங்கள் உங்கள் உடலை வருத்திக் கொள்ளலாமா என்று கண்ணீர் விட்டுக் கதறினர்.

உனக்குத்தான் தெரியுமே? நாட்டுக்காக நான் என் உயிரையும் கொடுப்பேன் என்று! நேற்று இரவு எட்டு மணிக்கு உணவு உண்ட பிறகு இன்று காலை ஆறு மணி வரை எதுவுமே சாப்பிடவில்லை. பத்து மணி நேரம்! அறுநூறு நீண்ட நிமிடங்கள்! என் உடன்பிறப்பின் குறை தீர்க்க வழி ஒன்று என் விழியிலே புலப்படும் வரையில் என் உடலையே அழித்திடவும் தயாராக இருந்தேன். களைப்பிலே சற்று கண்ணயர்ந்தேன். என் கனவில் நம் ஒரே தலைவரான தந்தை பெரியாரும், இன்னும் ஒரு தலைவரான அறிஞர் அண்ணாவும் வந்தனர்; என்னைப் பார்த்து நகைத்திட்டனர். அந்நாளிலே சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று இல்லையா? தங்கம் பொங்கும் கொங்கு நாடும், கொண்டை போட்ட கெண்டை மீன் கண்கள் உள்ள பெண்கள் வாழும் தொண்டை நாடும், இன்னும் பாரி, ஓரி, காரி போன்றோர் வாழ்ந்து வீழ்ந்த சேரிகளும் இல்லையா? தமிழ் நாட்டை இப்போதைக்கு இரண்டாகப் பிரித்திடலாமே என்று ஆலோசனை தந்திட்டனர். ஆஹா, அருமையான யோசனை என்று நான் துள்ளிக் குதித்தேன். வழி கிடைத்துவிட்டதும், முப்பத்தி ஆறாயிரம் நொடிகளுக்கு பின் துணைவியார் தந்த காப்பியை அருந்தி என் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்.

மதுரை, அதற்கு தெற்கே உள்ள பகுதிகள் இனி மேல் ஒரு தனி மாகாணமாக செயல்படும். அது பெரியார் காமராஜ முத்துராமலிங்க நாடு என்று அழைக்கப்படும். மதுரைக்கு வடக்கே உள்ள பகுதிகள் அண்ணா காயிதேமில்லத் அய்யன் திருவள்ளுவர் நாடு என்று அழைக்கப்படும். இரண்டு மாகாணங்கள்! இரண்டு முதலமைச்சர்கள்! தமிழா, உன் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! முதல் முறையாக தி.மு.க. இரண்டு மாநிலங்களில் ஆட்சி அமைக்கப் போகிறது! மகிழ்ச்சிதானே! உன் மகிழ்ச்சியைக் காட்டு! மானாட மயிலாட நிகழ்ச்சியில் வருவது போல ஆடு, பாடு, கொண்டாடு!

ஜெயலலிதா அறிக்கை:
மிசோரத்தில் ஆறு லட்சம் மிஜோக்கள் இல்லை, ஏழு லட்சம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர் இந்த நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். குடும்ப சண்டையை தவிர்க்க நாட்டையே துண்டாடுகிறார். அன்று ஜின்னா இந்திய நாட்டை பிளந்தார். இன்று அண்ணா வழி வந்தவர் என்று சொல்லிக் கொள்ளும் இந்த தறுதலை தமிழ் நாட்டை பிளக்கிறார். அண்ணா, எம்ஜிஆர் வழி வந்த கடைசி தொண்டன் இருக்கும் வரை இது நடக்காது! நான் அடுத்த இரண்டு வாரம் கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கப் போகிறேன். அப்புறம் மூடு இருந்தால் இன்னொரு அறிக்கை விடுவேன். அதற்கு பயந்தாவது இந்த தறுதலை இந்த திட்டத்தை கை விடட்டும்!

ராமதாஸ் அறிக்கை:

நாங்கள் இந்த திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால் இந்த புது மாநிலங்கள் சரியாகப் பிரிக்கப்படவில்லை. கலைஞரே சொன்னது போல சேர, சோழ, பாண்டிய, கொங்கு, தொண்டை, வன்னிய நாடுகள் உருவாக்கப்பட வேண்டும். அதனால் வன்னிய நாடு என்று ஒரு மாகாணம் உருவாக வேண்டும் என்று எல்லா வன்னியர்களும் அந்நியர்களும் போராட வேண்டும். இதற்காக இன்றிலிருந்து திண்டிவனம் அருகே உள்ள சாலைகளில் உள்ள எல்லா மரங்களும் வெட்டும் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தை காடுவெட்டி குரு தலைமை ஏற்று நடத்துவார்.

சோ ராமசாமி தலையங்கம்:

சாலமன் தாய்மார்களின் சண்டையை நிறுத்த முடியாமல் குழந்தையை இரண்டாக வெட்டுகிறேன் என்று சொன்னானாம். இங்கே சகோதரச் சண்டை நாட்டை இரண்டாக்குகிறது. இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு கேடு. இதை எதிர்க்க எல்லாரும் சேர்ந்து நரேந்திர மோடியை தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

விஜயகாந்த் அறிக்கை:

மிசோரத்தில் ஆறு லட்சமும் இல்லை, ஏழு லட்சமும் இல்லை. அங்கே இருப்பது எட்டு லட்சத்து முப்பதாயிரத்து அறுநூற்று நாற்பத்தி இரண்டரை மிஜோக்கள். இந்த அரை என்று நான் சொல்வது ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும் மிஜோரத்து இளம் பெண் ஆங் சிங் சூவை.

காங்கிரஸ் தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனில் பேட்டி:

நமது நிருபர்: தமிழகம் பிரிக்கப்படுவதைப் பற்றி உங்கள் நிலை என்ன?
தங்கபாலு: இது பற்றி மேலிடம்தான் கருத்து சொல்ல வேண்டும்.
நமது நிருபர்: இன்றைக்கு இங்கே டிஃபனுக்கு பஜ்ஜியா பக்கோடாவா?
(ஒரே நேரத்தில்)
பீட்டர் அல்ஃபோன்ஸ்: இது பற்றி மேலிடம்தான் கருத்து சொல்ல வேண்டும்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: மிக்சர்
ஜி.கே. வாசன் விறுவிறுப்பாக ஏதோ எழுதத் தொடங்குகிறார்.
நமது நிருபர்: என்ன எழுதுகிறீர்கள்?
ஜி.கே. வாசன்: எப்படி இளங்கோவன் கட்சி கட்டுப்பாட்டை மீறுகிறார் என்று சோனியாவுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கார்த்திக் சிதம்பரம்: என்ன கடிதம் எழுதுகிறீர்கள் என்று நீங்கள் சொல்வது கட்சி கட்டுப்பாட்டை மீறுவதாகும். இது பற்றி கட்சி மேலிடம் அல்லவா கருத்து சொல்ல வேண்டும்? நீங்களே எப்படி சொல்லலாம்?
பேட்டி அடிதடியில் முடிகிறது. நமது நிருபர் மிக்சர் சாப்பிடாமலே ஓட்டம் பிடிக்கிறார்.

குமுதம் ரிப்போர்ட்டர்:

குடும்பத்துக்குள் சொத்து தகராறு என்று வந்துவிட்டது, பாகப்பிரிவினைதான் ஒரே வழி என்று ரொம்ப நாளாகவே தயாளு அம்மா சொல்லிக் கொண்டிருக்கிறாராம். அழகிரிக்கு தென் தமிழகம், ஸ்டாலினுக்கு வட தமிழகம், கனிமொழிக்கு மத்திய மந்திரி பதவி, தயாநிதி மாறன் டெல்லி அரசியலை கவனித்துக் கொள்வார் என்று முடிவாகி இருக்கிறதாம். தமிழரசு, செல்வி எல்லாருக்கும் நேரடியாக வரிப்பணத்திலிருந்து ஒரு சதவிகிதம் வருஷா வருஷம் போய்விட வேண்டுமாம். கலைஞர் ரொம்ப தயங்கினாராம். அப்புறம் இனி மேல் வட தமிழ் நாடு அரசும் தென் தமிழ் நாடு அரசும் போட்டி போட்டுக்கொண்டு உங்களுக்கு விழா எடுக்குமே, விருது கொடுக்குமே என்று சொன்னதும்தான் ஒத்துக் கொண்டாராம்.

பசுமை தாயகம் விழா:

பசுமை தாயகம் நிர்வாகியும் பா.ம.க. தலைவர் ராமதாசின் மருமகளும் ஆன சௌம்யா கூடுவாஞ்சேரியில் ஐநூறு மரங்களை நடும் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு வன்னியரும் அந்நியரும் பெருந்திரளென வந்து விழாவை சிறப்புறச் செய்ய வேண்டும் என்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் அன்புமணி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதற்கு காடுவெட்டி குரு அழைக்கப்படுவாரா என்று கேட்டதற்கு அன்புமணி காடுவெட்டி குருவுக்கு அப்போது மரம் வெட்டும் வேலை இருப்பதால் வரமாட்டார் என்று சுருக்கமாக பதிலளித்தார்.

வீரமணி கருத்து:

இன மானம் காக்கும் தலைவர் கலைஞர். பெரியாரின் கனவை நிறைவேற்றிவிட்டார்.

கலைஞர் பேட்டி:

நீங்கள் மிஜோக்கள் பற்றி சொன்னது தவறான கணக்கு என்று ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சொல்லி இருக்கிறார்களே!

அவர்கள் அங்கே இருக்கும் பார்ப்பன வந்தேறிகளையும் சேர்த்து சொல்கிறார்கள். பார்ப்பனர்கள் தமிழர்களும் இல்லை, மிஜோக்களும் இல்லை. ஜெயலலிதா தன் பார்ப்பனத் திமிரால் அப்படி சொல்கிறார். அந்த பார்ப்பன சதி வலையில் கால் நூற்றாண்டு நண்பர் காப்டனும் விழுந்துவிட்டாரே! ஆனால் நான் பார்ப்பனீயத்துக்குத்தான் எதிரி, பார்ப்பனர்களுக்கு இல்லை என்பதை மறக்காதீர்கள்.
உங்களை தறுதலை என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறாரே?
அந்த பெண் பிசாசு எப்போதும் நாகரீகமற்ற முறையில்தான் பேசும்.

உங்கள் திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா?

உங்களிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன். ராகுல் காந்தி முதல்வர் ஆக வசதியாக உ.பி.இலிருந்து ஒரு புது மாநிலத்தை உருவாக்கலாம் என்று ஐடியா கொடுத்தேன், அன்னை சோனியா உடனே என் திட்டத்துக்கு பச்சை விளக்கு காட்டிவிட்டார்.

ராமதாஸ் தமிழ் நாட்டை இன்னும் பல பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்று சொல்கிறாரே!

ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் தலைக்கு ஒரே பையன்தானே? அவர்களுக்கு இரண்டு மூன்று பையன்கள் பிறந்தால் அவர்களுக்குள் பிரித்துக் கொள்வார்கள்.

காடுவெட்டி குருவின் மரங்களை வெட்டும் போராட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இவர் காடுவெட்டி குருவா விறகுவெட்டி குருவா?

இந்த போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வரப் போகிறீர்கள்?

அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தரப் போகிறோம்.

வீரமணி நீங்கள் பெரியாரின் கனவை நிறைவேற்றுகிறீர்கள் என்கிறாரே? பெரியார் தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் என்று சொன்னாரா?

அவர் பெரியார் என் கனவில் வந்ததை சொல்கிறார்.

பெரியார் காமராஜ முத்துராமலிங்க நாடு, அண்ணா காயிதேமில்லத் அய்யன் திருவள்ளுவர் நாடு என்று சொல்ல கஷ்டமாக இருக்கிறதே?

பெரியார் காமராஜ முத்துராமலிங்க நாடு என்பதை சுருக்கி அழகிரி நாடு என்று சொல்லலாம். அதே போல அண்ணா காயிதேமில்லத் அய்யன் திருவள்ளுவர் நாடு என்பதை சுருக்கி கலைஞர் கருணாநிதி நாடு என்று அழைக்கலாம்.

உங்கள் அடுத்த திட்டம் என்ன?

எனக்கு நானே திட்டம்! எனக்கு நானே எல்லா ஊரிலும் மணிமண்டபம் எழுப்பப் போகிறேன். இந்த மணிமண்டபங்கள் தமிழர்களுக்கு எழுச்சி ஊட்டும்.

அழகிரி-ஜெயலலிதா கூட்டு!

இன்று அழகிரி ஜெயலலிதாவை அவரது கொடநாடு எஸ்டேட்டில் சந்தித்தார். பிறகு தி.மு.கவுடன் கூட்டு சேர்வதாக ஜெயலலிதா அறிவித்தார். அவர்கள் உடன்படிக்கையின்படி அழகிரி தென் தமிழ்நாட்டு முதல்வராக இருப்பார். கொடநாடு எஸ்டேட் என்று ஒரு புது மாநிலம் உருவாக்கப்படும், அதற்கு ஜெயலலிதா முதல்வராக இருப்பார்.

கானா தப்பி ஓட்டம்!

ஸ்டாலின் ஆதரவாளரும், மாவட்ட செயலாளரும் ஆன கருப்பசாமி பாண்டியன் என்ற கானா நேற்று கள்ளத்தோணி ஏறி இலங்கையில் ஒரு தமிழர் காம்பில் சேர்ந்தார். தமிழர் காம்பில் ராஜபக்சே வசதிகள் செய்து தரவில்லையே என்று கேட்டதற்கு அடப் போப்பா உயிரோட இருக்கறதே பெரிய விஷயம் என்றார். இதைப் பற்றி கவிதாயினி கயல்விழி “இவர் கானா, ஓடிப் போனார், எங்கப்பா பெரிய ‘ஆனா’” என்று ஒரு கவிதை எழுதி கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் அறிக்கை:

நானும் அழகிரியும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்படுவோம் என்று ஸ்டாலின் சோகமாக ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்.
அழகிரி நாட்டுக்கு வர ஸ்டாலினுக்கு விசா மறுக்கப்பட்டது என்பதை துரை தயாநிதி மறுத்திருக்கிறார்.

நக்கீரன் ரிபோர்ட்:

ராமதாசும் ஜெயலலிதா பாணியில் செல்ல நினைக்கிறாராம். தைலாபுர நாடு என்று ஒன்று அமைந்தால்தான் பா.ம.க. ஆட்சி அமைக்க முடியும், அன்புமணி முதல்வராக முடியும் என்று யோசிக்கிறாராம்.

அழகிரி முழக்கம்!

யாரிடமும் பிடி கொடுத்துப் பேசாத அழகிரியை நேற்று நம் நிருபர் விரட்டிப் பிடித்தார். ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் மாதிரி ஏதாவது சொல்லுங்கள் என்று அழகிரியிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அழகிரி சொன்னார் – “மதராஸ் மனதே!”

Monday, October 11, 2010

நம்ம ஹீரோகளுக்கு புடிச்ச வடிவேலு டையலாக்குகள்

ரஜினி: பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனா பேஸ்மட்டம் வீக்கு

கமல்: ரிஸ்க் எடுகுரதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்டுற மாதிரி

அஜித்: பிகினிங் எல்லாம் உண்ட நல்லாதான்யா இருக்கு, ஆனா பினிசிங் சரி இல்லையே

விஜய்: நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய் போய் விட்டதே...

விக்ரம : இப்டி உசுபேத்தி விட்டு உசுபேத்தி விட்டு உடம்ப ரணகள படுத்திரானுகளே...

சூர்யா: ராஜ தந்திரங்களை கரைத்து குடித்து விட்டாயடா....

விஜயகாந்த்: என்ன இதுவரைக்கும் யாரும் அடிச்சதில்ல ... அது இந்த மாசம் நான் சொன்னது போன மாசம்

கார்த்திக்: வேணாம் விட்டுடு வலிக்கிது அழுதிடுவேன்

சரத் குமார்: மாப்பு வட்சிடாண்டா ஆப்பு

சிம்பு: இது வாலிப வயசு...

தனுஷ்: இது அண்ணன் கிழிச்ச கோடு... தாண்ட படாது...

ஜே. கே. ரித்தீஷ்: போங்க தம்பி போங்க எங்கள அடிச்சி அருவா கம்பு எல்லாம் டையர்டு ஆகி போய் ரெஸ்ட் எடுத்துகிட்டு இருக்குதுக நீங்க என்ன அடிச்சி பெரிய ரௌடினு பேரு வாங்க போறேங்கலாக்கும்...

சேரன்: எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்... இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிடானுகடா

நம்ம அரசியல்வாதிக,

மன்மோகன் சிங்: இவனுக மத்தியில உயிர் வாழ்றதே நமக்கு பெரிய வேலையா போட்சே...

கருணாநிதி : இன்னுமாடா இவங்க நம்மள நம்புராங்கே....

ஜெயலலிதா: மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்த பாக்குறது எவ்ளோ சுகம்....

ராமதாஸ்: போட்சா.. போட்சா... போட்சா....

அழகிரி:
சூனா பானா... போ..போ.. போய்டே இரு ... நம்மள எவனும் ஒன்னும் பண்ண முடியாது ...

வை.கோ:
ஒய் ப்ளட்.. சேம் ப்ளட்

Sunday, October 10, 2010

ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்!

ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்! என்ற தலைப்பில் வந்த கூட்டாஞ்சோறு நகைச்சுவை பதிவு :-)


அயோத்தி தீர்ப்பை படிக்க வேண்டும் என்றுதான் பார்க்கிறேன், ஆனால் பல ஆயிரம் பக்கத்தில் இருக்கிறதாம். இதை டவுன்லோட் செய்வதற்குள்ளேயே தாவு தீர்ந்துவிடும், படிப்பது எப்போது? ஒரு மாறுதலுக்காக இந்த பதிவு…

டிஸ்க்ளைமர்: ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் பேரக்குழந்தைகள் இருக்கிறார்களா என்று கூட தெரியாது. சங்கநிதி என் கற்பனைப் பாத்திரம் மட்டுமே. இந்த டுமீல் செய்திகளை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு குழந்தைகளை கிண்டல் செய்கிறாயா பாதகா என்று கிளம்பிவிடாதீர்கள்!

ஜெய் ஹோ ஃபிலிம்ஸ்


நேற்று கலைஞரின் கொள்ளுப்பேரனும் ஸ்டாலினின் பேரனும் ஆன சங்கநிதி ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த விழாவுக்கு கலைஞரின் குடும்பத்தினரும் சினிமாத் துறையினரும் பெருவாரியாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சங்கநிதிக்கு வயது பத்துதான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். முதல் படத்துக்கு கலைஞரே கதை வசனம் எழுதுவதாக இருந்ததாம். ஆனால் சங்கநிதி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள மறுத்துவிட்டதால் இப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், கவுதம் மேனன், ஷங்கர் ஆகியோர் தாங்கள் அண்ணன் சங்கநிதியிடம் கதை சொல்வதற்காக ஸ்லாட் கேட்டிருப்பதாக தெரிவித்தனர். அனேகமாக ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.


கலை நிகழ்ச்சி:

நமீதா, முமைத் கான், ரகசியா ஆகியோரின் ஆட்டம், பாட்டு, கவிஞர் வாலி தலைமை தாங்கிய கவி அரங்கம், சங்கநிதியிடம் உயர்ந்து விளங்குவது ஸ்டாலினின் திறமையா இல்லை கலைஞரின் பெருமையா என்ற பட்டி மன்றம் என்று பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாலியின் கவிதையிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே கொடுத்திருக்கிறோம்.


முகத்திலே பரு

முளைக்காத சிறு உரு

ஆனாலும் கருவிலே திரு

அதற்கு காரணம் -

கலைஞர் என்ற கற்பகத் தரு

சளைக்காமல் போட்ட எரு!

உன்னிடம் சேர்ந்தாள் செந்திரு -

என்று பாற்கடலான் தொடுப்பான் செரு!


இந்த கவிதையை கேட்டதும் சங்கநிதி “What is செந்திரு? I don’t understand this Tamil!” என்று வாலியை வானளாவ புகழ்ந்தார்.


கலைஞர் கேள்வி பதில்:

கம்பெனிக்கு ஜெய் ஹோ ஃ பிலிம்ஸ் என்று ஏன் பேர் வைத்தீர்கள்?


ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது என்று பலரும் குறை சொன்னார்கள். அவர்கள் முகத்தில் கரியைப் பூசவே இப்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்று பேர் வைத்திருக்கிறோம். மேலும் இது ஏ. ஆர். ரஹ்மானின் புகழ் பெற்ற, ஆஸ்கார் விருது வென்ற, அன்னியர் பாராட்டும் பாட்டு. சிறுபான்மையினரிடம் இயக்கம் கொண்டுள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தவே இப்படி ஒரு பேர்.


பத்து வயதிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு பணம் எப்படி வந்தது?


குறுமுனி என்று சொல்லப்பட்ட அகத்தியன் தமிழ் மொழிக்கு இலக்கணமே எழுதவில்லையா? உருவத்தையும் பருவத்தையும் பார்த்து புருவத்தை உயர்த்தாதீர்கள், துருவ நட்சத்திரமாய் இலங்கும் திறமையைப் பாருங்கள்.


பத்து வயது என்பது சட்டப்படி மைனர். மைனராக இருக்கும்போதே திரைப்படத் தயாரிப்பா?


சட்டப்படி மைனராக இருந்தால் தவறில்லை. இட்டப்படி பெண்களோடு சுற்றும் மைனராக இருந்தால்தான் தவறு.


இருந்தாலும் இந்த வயதில் படம் எடுக்கும் அளவுக்கு பணம் என்றால் உதைக்கிறதே?


கலைஞர் உதவியாளர் சண்முகநாதனிடம் ஏதோ பேசுகிறார். பிறகு: இந்த நல்ல சமயத்தில் அரசின் திட்டம் ஒன்றைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். பத்திரிகைகள்தான் நாட்டில் ஜனநாயகத்தை காக்கின்றன. ஆனால் பத்திரிகை நிருபர்களோ வறுமையில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஈ.சி.ஆர். ரோட்டில் இலவச வீடு வழங்கும் திட்டம் – சங்கநிதி திட்டம் – வகுத்திருக்கிறோம். சங்கநிதி திட்டம் பற்றி பத்திரிகையாளர் சங்கத்தில் பேசுவோம்.


கலைஞரின் அறிவிப்புக்கு பிறகு பத்து வயதில் சினிமா தயாரிப்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா, ஓசியில் கிடைக்கும் வீடு எத்தனை சதுர அடி, சங்கநிதிக்கு பிடித்த உணவு என்ன, பிடிக்காத உணவு என்ன, இரவு எத்தனை மணிக்கு தூங்குவார், காலை எத்தனை மணிக்கு எழுந்திருப்பார், ஹோம்வொர்க் செய்ய அப்பா உதவி செய்வாரா, அம்மாவா, இல்லை ஹோம்வொர்க் கொடுக்கும் வாத்தியாரே அதை செய்தும் தந்துவிடுவாரா என்ற டைப்பில் (மட்டுமே) பல கேள்விகள் எழுந்தன. இடம் இல்லாததால் எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியவில்லை.


ஜெயலலிதா கருத்து:

இதைப் பற்றி ஜெயலலிதாவின் கருத்தை அறிய முயன்றோம். அவர் கொடநாட்டில் படுக்கையை விட்டு எழுந்த பிறகு கருத்து சொல்வார் என்று ஓ.பி. பன்னீர்செல்வம் பயந்து பயந்து பணிவோடு கருத்து தெரிவித்தார்.


விஜயகாந்த் பேட்டி:

இப்படி தன குடும்பமே கண்ணாக இருப்பவர் நாட்டுக்கு முதல்வராக இருக்க அருகதை அற்றவர் என்று விஜயகாந்த் கூறினார். நீங்களும் உங்கள் குடும்பத்தவரைத்தானே முக்கிய பதவியில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது ஒரு குறையில்லை, கலைஞரும் என் குடும்பத்தவருக்கு முக்கிய பதவி அளித்தால் நான் அவரையும் குறை சொல்ல மாட்டேன் என்று கருத்து சொன்னார். தமிழகத்தில் கூட்டணி மாறுகிறது என்று திமுகவினரும், பெட்டி மாறுகிறது என்று அதிமுகவினரும் காரசாரமாக மேடையில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.


ராமதாஸ் கருத்து:

கூட்டணி வைத்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும் என்று ராமதாஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். திமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்த சங்கநிதிக்கு வாழ்த்து சொல்வோம்; இல்லையேல் வாரிசுகளைக் கொண்டு கலை உலகை கைப்பற்றும் முயற்சிகளை கண்டிப்போம், இதைக் கூடவா சொல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களை செல்லமாக கடிந்துகொண்டார்.


சத்தியமூர்த்தி பவனில் கூட்டம்:

இது குறித்து சத்தியமூர்த்தி பவனில் கூடிய கூட்டம் எந்த கோஷ்டிக்கு எத்தனை ப்ரிவ்யூ டிக்கெட் என்ற சண்டை முற்றி அன்போடு கலைந்தது என்று தெரியவருகிறது.


துக்ளக் தலையங்கம்:

குடும்பமே கட்சி என்ற நிலையிலிருந்து இன்று குடும்பமே சினிமா என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்கும் நல்லதில்லை, கலைஞர் வீட்டுக்கும் நல்லதில்லை. வாரிசு போர்கள் இன்னும் பெரிதாகப் போகிறது.


கலைஞர் மீதும் குறைப்படுவதற்கில்லை. வயதாக ஆக குடும்பத்தினர் மீது பாசம் பெருகிக் கொண்டேதான் போகும். இதனால்தான் குடும்பம் இல்லாத தலைவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும். காமராஜ் கட்டை பிரம்மச்சாரி. அவரை விட சிறந்த தலைவர் யார்? வாஜ்பேயி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரை விட தேசபக்தி உள்ள பிரதமர் யார்? ஜெயலலிதாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் எல்லாரும் ஜெவுக்கே ஓட்டு போடுங்கள்!


டி. ராஜேந்தர் பேட்டி:

வாரிசுகள் இப்படி சினிமாவில் நுழைவது நல்லதில்லை என்று டி.ஆர். பேட்டி அளித்தார். உங்கள் வாரிசு திரை உலகில் முன்னணி ஹீரோவாச்சே என்று கேட்டதற்கு சிங்கண்டா சிம்பு, வச்சுக்காதே வம்பு என்று எச்சரித்தார்.


ஜூவியில் கழுகு ரிப்போர்ட்:

சங்கநிதி எலிமெண்டரி ஸ்கூல் முடித்து ஹைஸ்கூல் சேர்வதற்கு முன் தாத்தாவிடம் ஆசி வாங்க வந்தாராம். தாத்தா நான் பாஸாயிட்டேன் என்று ஆசையோடு ஓடி வந்த அவரிடம் கலைஞர் நீ பெரியவனாகி என்ன பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டாராம். பெரியவனாகி என்ன செய்ய வேண்டும் என்பதை விடுங்கள், இப்போது யூத் படங்கள் எதுவுமே நன்றாக இல்லை, ஒரு நல்ல யூத் படம் எடுக்க வேண்டும் என்று சங்கநிதி சொன்னாராம். ஜெய் ஹோ என்று கலைஞர் ஆசீர்வதிக்க, அதையே கம்பெனி பெயராக வைத்து சினிமா தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!


அழகிரி குமுறல்:

என் பேரன் எல்கேஜி முடித்து யுகேஜி போனானே அவனை வைத்து சினிமா வேண்டாம் ஒரு டிவி சீரியல், அது கூட வேண்டாம் ஒரு விளம்பரப் படம் கூட தயாரிக்கவில்லையே என்று அழகிரி குமுறுகிறாராம். அவரை சமாதானப்படுத்த ஃபோன் செய்த தயாளு அம்மையாரிடம் தேர்தலுக்கு மாங்கு மாங்கென்ற வேலை செய்ய மட்டும் நான், ஆனால் சினிமா கம்பெனி ஸ்டாலின் பேரனுக்கு மட்டும்தானா என்று ஆவேசமாக கேட்டாராம். ஜெய் ஹோ கம்பெனியிலிருந்து வரும் எந்த படமும் மதுரைக்கு தெற்கே ரிலீஸ் ஆகாது என்று சூளுரைத்தாராம். கலைஞர் நிலைமையை சமாளிக்க அழகிரி பேரனுக்கு விஜய் ஹோ ஃபிலிம்ஸ் என்று கம்பெனி ஆரம்பிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம். என்ன ஆகுமோ என்று அரசியல் வட்டாரங்கள் கவலையோடு நிலையை கவனித்து வருகின்றன.


கொசுறு செய்தி:

ஸ்டாலின், அழகிரி குடும்பத்திலிருந்து இப்படி சினிமா தயாரிப்பாளர்கள் கிளம்புவதை சன் குழுமம் கவலையோடு பார்த்து வருகிறதாம். தங்கள் இமேஜை உயர்த்த இனி மேல் கலாநிதி மாறன் தயாரிக்கும் என்று போட்டால் மட்டும் போதாது, ஓபனிங் சாங்கில் ஹீரோவுக்கு பதிலாக கலாநிதியையே வைத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம். கலாநிதிக்கு நடனம் கற்றுக் கொள்ள நேரமில்லை என்பதால் மாண்டேஜாக எடுத்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம். என் பேரு படையப்பா மெட்டில் என் பேரு கலாநிதி, சன் டிவி உங்க தலைவிதி, மிச்ச சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டு மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி என்று வாலி எழுதிய பாட்டு ஒன்று இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது.